சசிகலா இதை செய்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும்.. கே.பி.முனுசாமி அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Oct 18, 2021, 6:08 PM IST
Highlights

அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை. ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர்.

சசிகலா கட்சிக்கு தொண்டராக வரவில்லை. ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர் என  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி;- அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை. ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர்.

காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கும் பலர் உதவியாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும்போது தானோ, தனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம் என எழுதிக்கொடுத்துவிட்டுதான் ஜெயலலிதாவுடன் இணைந்தார். 

அந்த வாக்கை சசிகலா நிறைவேற்ற வேண்டும். சசிகலா இனி அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும். அதிமுகவுக்கும் நன்மை ஏற்படும். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரே ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கை பார்த்து கட்சியை அவரிடம் ஒப்படைத்தார் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

click me!