அதாவது அடுத்த மாதம் 3 தேதி வரை பாராளுமன்றத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் , வைரஸ் அச்சத்தால் முன்கூட்டியே அவை நடவடிக்கைகளை முடிக்க சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார் .
கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இருந்து வருகிறது . இந்நிலையில் இந்தியாவில் சில தினங்களாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனா கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.
இந்த வைரஸை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது . மாநில அரசுகளும் மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது . அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் திருமண நிகழ்ச்சிகள் , கோவில் திருவிழாக்கள் , மற்றும் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன . இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை விரைவில் முடித்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுவருகிறது.
அதாவது அடுத்த மாதம் 3 தேதி வரை பாராளுமன்றத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் , வைரஸ் அச்சத்தால் முன்கூட்டியே அவை நடவடிக்கைகளை முடிக்க சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார் . அனைத்து கட்சி தலைவர்களுடன் இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகின்றன , எனவே அடுத்த வாரம் மட்டும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிகிறது . வரும் 20ம் தேதியுடன் பாராளுமன்ற கூட்டத் தொடரை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.