கள்ளக்காதல் செய்த கள்ளக் காதலி…. சரமாரியாக குத்திக் கொன்ற கள்ளக் காதலன் !!

By Selvanayagam PFirst Published Apr 29, 2019, 9:29 PM IST
Highlights

வேறுறொரு  இளைஞருடன்  பழகியதால் கள்ளக்காதலியை  குத்திக் கொன்ற கள்ளக் தலனை புதுச்சேரி  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுவை குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் கீதா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் வண்டி ஓட்டும்  தொழிலாளி ஆனந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த் அங்கு சென்ற போது அவருக்கும், கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

இது குறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்த் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஆனந்துக்கும், கீதாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனால் கீதாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இருப்பினும் ஆனந்துடன் அவர் தொடர்ந்து பழகி வந்தார். 

இந்த நிலையில் கீதாவுக்கும் அந்த பகுதியை சேர்ந்த வெறோரு  இளைஞருக்கும்  பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்து கண்டித்தபோது சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கைதான ஆனந்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!