என் கணவரை முத்தமிடுவேன்... நடுரோட்டில் போலீஸாரிடம் இளம்பெண் வாக்குவாதம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 19, 2021, 5:53 PM IST
Highlights

நான் என் கணவருக்கு முத்தமிடுவேன். உங்களால் தடுக்க முடியுமா? என அந்த பெண் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்கிறார். 

உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில், இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் நேற்று மட்டும் ஒருநாள் கொரோனா பரவலின் எண்ணிக்கை 25,462 ஆக அதிகரித்தது.

அதேபோல் கொரோனாவால் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த பங்கஜ் தத்தா, அபா குப்தா தம்பதியினர் நேற்று மாலை ஊரடங்கை மீறி காரில் வந்துள்ளனர். அப்போது டெல்லியின் தரியகஞ்ச் என்ற இடத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தம்பதியினர் வந்த காரை சோதனை செய்தபோது அவர்கள் மாஸ்க் அணியாதது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் ஏன் மாஸ்க் அணியவில்லை என கேள்வி எழுப்பினர். உடனே போலீசாரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், நான் என் கணவருக்கு முத்தமிடுவேன்.

कोरोना के इस दौर में ऐसे जाहिल लोग भी याद किये जाएंगे ,कार में बैठा एक कपल बिना कर्फ्यू पास के दरियागंज इलाके में घूम रहा था वो भी बिना मास्क के,पुलिस ने जब रोका तो बोला अपने दोस्त को किस करूंगी,पुलिस ने केस दर्ज कर दोनों को गिरफ्तार किया pic.twitter.com/Z9iCnmp4Hu

— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs)

 

உங்களால் தடுக்க முடியுமா? என அந்த பெண் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்கிறார். இதனால், அவர்கள் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து,. பஞ்கஜ் தத்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அபா குப்தாவும் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.   

click me!