தூக்கிப் போட்டு மிதிச்சேன் பல்லு வந்துடும்.. எனக்கு இன்னொரு முகம் இருக்கு, காட்டவா.? பாட்சாவாக மாறிய அண்ணாமலை!

By Asianet TamilFirst Published Apr 2, 2021, 9:36 AM IST
Highlights

எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை நான் இங்கே காட்டவா, காட்டவா.. என்று திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரும் ஐபிஎஸ் முன்னாள் அதிகாரியுமான அண்ணாமலை பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. 
 

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரி அண்ணாமலையும் திமுக சார்பில் இளங்கோவும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அவரவக்குறிச்சியில் பூமத்தேவம் என்ற பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, கரூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை மிரட்டி பேசியது காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்தக் காணொலியில் அண்ணாமலை பேசும்போது,  “அரசியலுக்கு வந்த பிறகு அமைதியா இருக்கணும்னு நினைக்கிறேன். இந்த செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன் நானு. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.. நீ எல்லாம் ஒரு இது. உனக்கு பயந்து கை வைச்சா வயலன்ஸ் பண்ணினேன்னு மாத்திவிடுவியா? அண்ணாமலையை வயலன்ஸ்-ன்னு மாத்திடுவியா?
திமுககாரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன். அகிம்சைவாதியா அரசியல் போராட்டத்தை நடத்திட்டு இருக்கேன். ஆனா, எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை நான் இங்கே காட்டவா, காட்டவா...? அப்படி காட்ட வேணாம்னு நினைக்கிறேன்.  வீடியோ எடுப்பியா.. எடுத்துட்டு போ.. எலெக்‌ஷன் கமிஷன்ல கொடுப்பியா கொடுத்துட்டு போ... நீ என்ன செய்றியோ செய்.. இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது.” என்று அண்ணாமலை கோபத்தில் பேசியிருக்கிறார். ஐபிஎஸ் முன்னாள் அதிகாரியான அண்ணாமலை, கோபம் கொப்பளிக்க பேசிய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. தேர்தல் அதிகாரியிடம் அண்ணாமலை மீது திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.

click me!