இன்னொரு பெண்ணுடன் ஊர் மேய்ந்த கணவன்..!! வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய இளம் பெண்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 18, 2020, 10:57 AM IST
Highlights

இதற்கிடையில் ஷோபனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேலையைக் கழுத்தில் கட்டி தொங்கவிட்டபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என் சாவுக்குக் காரணமானவங்களை விடாதீங்கம்மா என -வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் விருதாச்சலத்தில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனுார் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(24) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா (21) என்பவருக்கும் கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆகி ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளார். திருமணத்தின்போது ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் திருமணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் சீர் வரிசையாக வழங்கி,திருமணம் முடித்துள்ளனர். 

பி.இ படித்த விஜயகுமார் சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். அதனால் விஜயகுமார் மற்றும் அவரது தாயார் மேலும் பணம், நகைகள் கேட்டு ஷோபனாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் விஜயகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஷோபனாவை அடித்து விரட்டுவதிலேயே விஜயகுமார் நோக்கமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (15.07.2020) அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷோபனா தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஷோபனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையில் ஷோபனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேலையைக் கழுத்தில் கட்டி தொங்கவிட்டபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் சாவுக்கு காரணமானவர்களை விட்டு விடாதீங்கம்மா என அவரின் தாயாருக்கு ஷேபனா தெரிவித்துள்ளது பதிவாகி உள்ளது. வீடியோ வெளியிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் விருதாச்சலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஷோபனாவின் மறைவுக்கு காரணமானவர்கள் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.
 

click me!