பழனி கோயிலுக்குள் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி.! அறிவிப்பு பலகை மீண்டும் அகற்றம்- சீறும் எச்.ராஜா

Published : Jun 25, 2023, 08:25 AM ISTUpdated : Jun 25, 2023, 08:27 AM IST
பழனி கோயிலுக்குள் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி.! அறிவிப்பு பலகை மீண்டும் அகற்றம்- சீறும் எச்.ராஜா

சுருக்கம்

பழனி முருகன் கோயிலுக்குள் முஸ்லிம்கள் செல்ல முயற்ச்சிப்பதாக தெரிவித்துள்ள எச்.ராஜா, இதனையடுத்து இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து விட்டு மீண்டும் அகற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.   

பழனி கோயில்- அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பழனி பகுதியை சேர்ந்த சாகுல் என்பவர், பேருந்துநிலையம் அருகே பழக்கடை நடத்திவருகிறார். இந்தநிலையில் சென்னையில் இருந்து வந்த தனது உறவினர்கள் சிலரை பழனி மலைக்கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக  அடிவாரத்தில் உள்ள  மின்இழுவை ரயில் நிலையத்திற்கு கூட்டி சென்றுள்ளார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லையென தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பதற்றமான நிலை ஏற்பட்டதையடுத்து இந்துமுன்னனி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மின்இழுவை ரயில் நிலையத்தில் குவிந்தனர்‌. 

மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை

இதனையடுத்து இந்து அமைப்பினரை  காவல் துறையினர் சமாதானம் செய்தனர். மேலும் மலைக்கோவிலுக்கு செல்ல வந்த மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்கு செல்ல முடியாது எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து  பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று மதத்தினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா,  பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல.

அறிவிப்பு பலகை அகற்றம்

கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து,  பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பழனி மலைக்கோவிலில் இந்துகளுக்கு மட்டும் அனுமதி; நிர்வாகத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!