கவுதமி பொய் சொல்றார் !! ஆதாரம் இருந்தா கொடுங்க… சம்பளம் கொடுக்கிறோம்…

First Published Feb 27, 2018, 12:28 PM IST
Highlights
gowthamy salary alrady paid.Rajkamal films told


விஸ்வரூபம் மற்றும் தசாவதாரம் படங்களில் ஆடை வடிவமைபபாளராக பணியாற்றியதற்கு நடிகர் கமலஹாசன் இன்னும் சம்பளம்  தரவில்லை என கவுதமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராஜ்கமல் நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. கவுதமிக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், ஆதாரத்தைக் கொடுத்தால் சம்பளம் தர தயாராக  இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமலஹாசனுடன் .பிரபல நடிகை 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தார்.  பின்னர் திடீரென கமல்ஹாசனுடன் உறவை முறித்து கொண்டு தனது மகளுடன் தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.



இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் மற்றும் தசாவதாரம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், இதற்கான  சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.

கமல் கட்சி ஆரம்பித்து இரண்டே நாளில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தள பயனாளிகள் கடும் விமர்சனத்தை வைத்தனர். தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தசாவதாரம்  படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன், விஸ்வரூபம் படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார், இந்தப் படங்களில் கவுதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளன.

திரைத்துறையைப் பொருத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விபரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.



அந்தவகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்றும் கமலஹாசனின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தவே கவுதமி இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் என ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

click me!