நடராஜன் கவலைக்கிடம்.. குளோபல் மருத்துவமனை தகவல்

First Published Mar 18, 2018, 12:03 PM IST
Highlights
global hospital report about natarajan health condition


புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குளோபல் மருத்துவமனைக்கு சென்று நேற்றிரவு வைகோ, திருமாவளவன் ஆகியோர் நடராஜனை பார்த்துவிட்டு வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் உடல்நல குறைவு காரணமாக அதே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடராஜனின் உடல்நிலை குறித்து குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மார்பக தொற்றால் அனுமதிக்கப்பட்ட நடராஜன் ஐசியு-வில் உள்ளதாகவும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குளோபல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்ப்பதற்கு சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 5 நாள் பரோலில் வந்தார் சசிகலா. இந்நிலையில், இம்முறையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் கேட்டுள்ளார். பரோல் கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.
 

click me!