மின்சாரக் கட்டணம் கழிக்கப்படும்... அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி..!

Published : May 18, 2021, 12:38 PM IST
மின்சாரக் கட்டணம் கழிக்கப்படும்... அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி..!

சுருக்கம்

பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சேலத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘’மின் கட்டண குளறுபடி குறித்து பயனீட்டாளர்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. உரிய ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின் போது அந்த தொகை கழிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு