பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் விரைவில் பாஸ்போர்ட்டில் சிப் ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் விரைவில் பாஸ்போர்ட்டில் சிப் ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ‘பாஸ்போர்ட் சேவா திவாஸ்’ எனும் விழாவில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மந்திரி பொறுப்பு ஏற்று முதன்முறையாக இவ்விழாவில் உரையாற்றி சிலருக்கு விருதுகளும் வழங்கினார். அப்போது பேசிய அவர்,“பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் பாஸ்போர்ட்டில் ‘சிப்’ ஒன்றை பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய ‘இ-பாஸ்போர்ட்’ நடைமுறைக்கு வரும். தற்போது ஆண்டிற்கு 1 கோடி பாஸ்போர்ட்டுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் தொடங்கப்படும்.கடந்த 5 ஆண்டுகளில் பாஸ்போர்ட்டுகளுக்கான மத்திய அரசின் சேவை மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வந்திருக்கிறது..!” என்றார்.
எனவே இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பாஸ்போர்ட்டுகள் திரும்பப்பெறப்பட்டு சிப் பொருத்தப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.