திமுக வானை நோக்கி... அதிமுக சசிகலா தலைமையை நோக்கி... பாஜக பாடையை நோக்கி.. நாஞ்சில் சம்பத் தாறுமாறு..!

By Thiraviaraj RMFirst Published Oct 13, 2021, 10:35 AM IST
Highlights

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கின.இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. காலை 7.15 நிலவரப்படி பெரும்பாலான இடங்களை திமுகவே வெற்றி பெற்றுள்ளது. 

கட்சிகள் சின்னத்தில் போட்டியிட்ட 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 137 இடங்களின் நிலவரம் தெரிய வந்திருக்கிறது. இதில் திமுக கூட்டணி 133 இடங்களில் முன்னணி அல்லது வெற்றி பெற்றிருக்கிறது. பாமக ஓரிடத்திலும் அதிமுக கூட்டணி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் 1208 பதவிகளுக்கான நிலவரங்கள் தெரிய வந்திருக்கிறது. இதன்படி திமுக கூட்டணி 891 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் பெற்றிருக்கின்றன. 

அதிமுக கூட்டணி 181 இடங்களில் மட்டுமே முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருக்கிறது. பாமக 33, அமமுக 5, தேமுதிக 1, மற்றவர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பதிவில், '’திமுக வானை நோக்கி உயர்கிறது; அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது; பாஜகவிற்கு பாடை தயாராகிறது.! வாழ்க வாக்காளர்கள்.!’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!