எம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published May 29, 2020, 9:07 AM IST
Highlights

“நாமக்கல் MP சின்ராஜை, அதிமுக MLA பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக் கண்டிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதால் அதனைத் தமிழக ஆளுநராவது செய்ய வேண்டும்! ஒரு MP-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.


திமுக சின்னத்தில் நின்று நாமக்கல்லில் எம்.பி.யாக வெற்றி பெற்ற கொமதேக கட்சியைச் சேர்ந்த. ஏ.கே.பி.சின்ராஜ் நகராட்சி,  பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கரோனா நிவாரணமாக தான் வழங்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்றும் நாமக்கல் எம்.எல்.ஏ. பாஸ்கர் அவருடைய வீட்டுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும் தனக்கு புகார் வந்துள்ளதாகப் பேசியதாக தெரிகிறது.


இந்தப் புகாரைப் பற்றி கேள்விபட்ட எம்.எல்.ஏ. பாஸ்கர் தன் ஆதரவாளர்களுடன் எம்.பி. சின்ராஜை சந்திக்க வந்தார். அப்போது நாமக்கல் பயணியர் மாளிகையில் இருந்த எம்.பி. சின்ராஜ் ஆதரவாளர்களுக்கும் எம்.எல்.ஏ. பாஸ்கரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தன் மீது புகார் கூறிய எம்.பி. சின்ராஜ் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று எம்.எல்.ஏ. பாஸ்கர் கூறியதாகக் கூறப்படுகிறது. எம்.பி. சின்ராஜ் தங்கியிருந்த அறையையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால், அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மீது எம்.எல்.ஏ. பாஸ்கர் தாக்குதல் நடத்த முயற்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாமக்கல் MP சின்ராஜை, அதிமுக MLA பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக் கண்டிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதால் அதனைத் தமிழக ஆளுநராவது செய்ய வேண்டும்! ஒரு MP-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!