வீடு திரும்பினார் விஜயகாந்த்... உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!

Published : Sep 02, 2018, 10:39 AM ISTUpdated : Sep 09, 2018, 08:09 PM IST
வீடு திரும்பினார் விஜயகாந்த்... உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!

சுருக்கம்

சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இரவில் ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. விஜயகாந்த்துக்கு 2  நாட்களாக மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது. 

இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பியதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்