ஆர்.கே.நகர் தொகுதியில் போராட்டம் நடத்தப்போகும் திவாகரன்! அதிர்ச்சியில் தினகரன்...!

First Published Jun 29, 2018, 3:35 PM IST
Highlights
Diwakaran struggle against Dinakaran


டிடிவி தினகரனுக்கு எதிராக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக திவாகரன் தெரிகிறது. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து மறைமுக உதவிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருகிற 4-ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக மனிதச் சங்கலிப் போராட்டத்தில் ஈடுபட திவாகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளில் அண்ணா திராவிடர் கழகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு பிரிவாக பிரிந்தது. சசிகலா தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

அதன் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஓரம் கட்டியது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுக கட்சியையும் ஆட்சியையும் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியை துவக்கி நடத்தி வருகிறார். அவருடனான நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த திவாகரன், அண்மையில் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த அண்ணா திராவிட கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர். டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

மனித சங்கிலி போராட்டத்திற்கான வேலைகளில் அக்கட்சியைச் சேர்ந்தோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசும்போது, எங்களின் அரசியல் எதிரி தினகரன். அவருக்கு எதிராகவே எங்களின் அரசியல் பயணம் இருக்கும். ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. தினகரன், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த தொகுதி மக்களுக்கு ஐ.ஓ.சி. எண்ணெய் குழாய் பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 4 ஆம் தேதி அன்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டத்தின் மூலம் எங்களின் பலத்தை நிரூபிப்போம் என்று கூறுகின்றனர்.

click me!