"மக்களுக்கு பிடித்த தினகரன்"! சொல்வது அமைச்சர் கே.பி.கருப்பண்ணன்!

First Published Dec 25, 2017, 12:07 PM IST
Highlights
Dinakaran favorite people Says minister KP Kuruppannan!


டிடிவி தினகரனை மக்களுக்கு பிடித்துள்ளது என்றும் அதனால் அவரை மக்கள் தேர்வு செய்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.பி.கருப்பண்ணன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு எம்எல்ஏக்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.  நேற்று தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தொடர்ந்து தினகரன் முன்னிலை வகித்து வந்தார். அவரின் வெற்றி உறுதியான நிலையில், பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். வேலூர் எம்.பி. செங்குட்டுவன், தினகரன் இல்லத்துக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார்.

செங்குட்டுவன் எம்.பி., தினகரனுக்கு வாழ்த்து கூறியதை அடுத்து, அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் அணி தாவுவதற்கான கவுண்டன் ஆரம்பமாகி விட்டது என்று கூறப்பட்டது. இதனை அடுத்து எடப்பாடி அணியில் உள்ள பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரன் பக்கம் வர இருப்பதாகவும் தெரிகிறது.

எடப்பாடி அணியில் உள்ள தனது ஆதரவாளர்கள் உள்ளார்கள் எனவும் அவர்கள் தேவையான நேரத்தில் வெளிவருவார்கள் எனவும் கடந்த சில மாதங்களாகவே தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், செங்குட்டுவன் எம்.பி., தினகரன் இல்லத்துக்கே வந்து வாழ்த்து தெரிவித்தார். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எம்.பி. செங்குட்டுவனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து பலர் டிடிவி தினகரன் அணிக்கு வருவார்கள் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.  அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கே.பி.கருப்பண்ணன், ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது குறித்து பேசும்போது, தினகரனை மக்களுக்கு பிடித்துள்ளது; அதனால் அவரை மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்று கூறினார். மேலும் பேசிய அவர், அதிமுக தோல்வி குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்தார்.

click me!