நடிகர் ரஜினிக்காந்த் இ பாஸ் இல்லாமல் பண்ணை வீட்டுக்கு சென்றாரா?.பதிலளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி ஆணையர்.

By T BalamurukanFirst Published Jul 23, 2020, 8:06 AM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டுக்கு அடிக்கடி சென்று ஓய்வு எடுத்து வருவது வழக்கம் இவரது இளைய மகள் மருமகன் பேரன் தனிமையில் அந்த பண்னைவீட்டில்  வசித்து வருகிறார்கள். பண்ணை வீடு செங்கல்பட்டு மாவட்டம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் இபாஸ் வாங்கிக்கொண்டு அங்கே சென்றாரா என்கிற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டுக்கு அடிக்கடி சென்று ஓய்வு எடுத்து வருவது வழக்கம் இவரது இளைய மகள் மருமகன் பேரன் தனிமையில் அந்த பண்னைவீட்டில்  வசித்து வருகிறார்கள். பண்ணை வீடு செங்கல்பட்டு மாவட்டம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் இபாஸ் வாங்கிக்கொண்டு அங்கே சென்றாரா என்கிற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 


ஏற்கனவே திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு வந்தார்.இங்கிருந்து அருகில் உள்ள மலைபகுதி சென்று விட்டு திரும்பிய போது செக்‌ போஸ்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் அவருக்கு வினையாக முடிந்தது. சாத்தான் குளம் தந்தை மகன் மரணத்திற்கு ஆறுதல் கூற திமுக இளைஞர் அணிச் செயலாளர் தயாநிதிஸ்டாலின் சாத்தான்குளம் வந்தார். அவரது வருகையும் இபாஸ் பெற்று வந்தாரா? என்று சர்ச்சை கிளம்பியது.அந்த பட்டியலில் ரஜினிக்காந்த் இணைந்திருக்கிறார். முடிவு எப்போது எப்படி வரும் என்று பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தவாறே சொகுசு கார் ஒன்றை ஓட்டி செல்லும் போட்டோ இணையத்தில் வைரலாகியது. அதை கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கி கேளம்பாக்கம் சென்றாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு  E – Pass தேவை என்பது கட்டாயம். ஆனால் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் இ பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

click me!