பன்னீருக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு...!!! - ஆளுநர் மாளிகை அறிவிப்பு...

 
Published : Aug 22, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
பன்னீருக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு...!!! - ஆளுநர் மாளிகை அறிவிப்பு...

சுருக்கம்

Deputy Chief Minister Panneerselvam has been allocated additional liabilities including the legislature election and passport.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு திட்டம், சட்டமன்றம், தேர்தல், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொறுப்புகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. 

பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் வகித்து வந்த நிதித்துறையும் பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. 

இதையடுத்து ஆளுநர் மாளிகை சென்ற பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் சில இலாக்காக்களை ஒபிஎஸ்க்கு ஒதுக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், பன்னீர்செல்வத்திற்கு திட்டம் சட்டமன்றம் தேர்தல், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொறுப்புகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!