ப.சிதம்பரத்தின் மெலிந்து போன மிடுக்கு... கருணை காட்டாத அமலாக்கத்துறை..!

By vinoth kumarFirst Published Oct 24, 2019, 12:20 PM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் காவலில் உள்ள ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் காவலில் உள்ள ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். அதில் பல மோசடிகள் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனையடுத்து, அவர் சிபிஐ அதிகாரிகளால் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதால், அவர் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

சிதம்பரத்தின் உடல்நிலை பாதிப்பு

அமலாக்கத்துறை வழக்கின் ஜாமீன் போது ப.சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் எடை 74லிருந்து 68 கிலோவாக குறைந்துவிட்டது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி வாதத்தின்போது தகவல் தெரிவித்துள்ளார். 

click me!