விருது பெற்றதற்கு விருந்து வைத்த கொரோனா தாக்கிய தாசில்தார்... கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2020, 11:28 AM IST
Highlights

குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்திரா கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவர். 

முதல்வரிடம் விருது பெற்றதை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடிய சென்னை குன்றத்தூர் தாசில்தார்  பணியிட  மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

.

குன்றத்தூர் புதிய தாலுக்காவாக பிரிக்கப்பட்டு குன்றத்தூரில் புதிய தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் ஜெயசித்ரா. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் கையால் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரின் சிறப்பு விருது பெற்றார். இந்நிலையில் விருது பெற்றதை கொண்டாடும் விதமாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றக்கூடிய துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பாராட்டு விழா முடிந்ததும் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து நடைபெற்றது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் இது போன்று எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விழா நடத்தியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


குறிப்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்ற வட்டாட்சியர் இது போன்ற செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்திரா கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவர். இந்த செய்தி அறிந்து காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, ஜெயசித்ராவை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 

click me!