சர்வாதிகாரி- காரியவாதியுடன் கொரோனாவும் கூட்டு... ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் மீது உதயநிதி கடும் பாய்ச்சல்..!

By Thiraviaraj RMFirst Published Jun 15, 2020, 4:32 PM IST
Highlights

சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
 

சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’’மக்களின் அறியாமையால் ஆட்சிக்கு வந்த ஒருவர்; அவர்கள் அறியாமலேயே ஆட்சிக்கு வந்த இன்னொருவர். இந்த சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம். இருந்தாலும் முயல்கிறோம்.

மக்களின் அறியாமையால் ஆட்சிக்கு வந்த ஒருவர்; அவர்கள் அறியாமலேயே ஆட்சிக்கு வந்த இன்னொருவர். இந்த சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம். இருந்தாலும் முயல்கிறோம்

— Udhay (@Udhaystalin)

 

ஊரடங்கிலும் டாஸ்மாக்கை திறக்க, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல, டோக்கன் விநியோகிக்க... என்று மக்களை குடிகாரர்களாக்க செய்த முன்னேற்பாடுகளில் சிறிதளவேனும் அவர்களை நோயற்றவர்களாக காப்பதற்கு செய்திருந்தால் இந்நேரம் கொரோனாவின் தாக்கம் குறைந்திருக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!