நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... எச்.ராஜா நேரில் ஆஜர்!

Published : Oct 22, 2018, 10:11 AM ISTUpdated : Oct 22, 2018, 10:12 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... எச்.ராஜா நேரில் ஆஜர்!

சுருக்கம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம் என எச்.ராஜா கூற, அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.  

இந்த வழக்கில் தன்னை பற்றி விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எச்.ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!