உழவர்கள் நெஞ்சை நிறைய செய்த மு.க.ஸ்டாலின்… வேளாண்துறை சார்பில் டிராக்டர் வழங்கி அசத்தல்!!

Published : May 31, 2022, 07:05 PM ISTUpdated : May 31, 2022, 07:08 PM IST
உழவர்கள் நெஞ்சை நிறைய செய்த மு.க.ஸ்டாலின்… வேளாண்துறை சார்பில் டிராக்டர் வழங்கி அசத்தல்!!

சுருக்கம்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயத்திற்காக சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கலெக்டர்கள் ஆறு, வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை எந்திரங்களை கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தஞ்சைக்கு சென்றார். 

அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். இதையடுத்து இன்று காலை 2 ஆம் நாளாக ஆய்வு பணியை தொடங்கினார். இதில் இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி முதலாவதாக இன்று காலை 9 மணிக்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். பணிகள் முடிந்துள்ள விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ள விவரங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவருக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மாவட்டத்தில் ரூ.3.46 கோடியில் 30 பணிகள் நடந்து வருகிறது. இதில் பணி முடிந்துள்ள விவரங்களை எடுத்து கூறினார். இதையடுத்து வேளாண்துறை சார்பில் விதைநெல், பூச்சிகொல்லி மருந்து, நாற்றங்கால் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டார். இதனைதொடர்ந்து வேளாண்துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு நெல்விதை பவர்டில்லர், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள் வழங்கினார். மேலும் ஒரு விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார். 

பின்னர் திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தின் வழியே செல்லும் ராமச்சந்திரன் வாய்க்கால் 5.60 கி.மீ. தூரம் ரூ. 5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணியையும் ஆய்வு செய்தார். தூர்வாருவதன் மூலம் இப்பகுதியில் 350 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அங்கும் விவசாயிகளை சந்தித்த முதல்வர் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் மேற்கொண்ட ஆய்வு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், 2 ஆம் நாளாக டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளின் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தேன். 4964.11 கிலோமீட்டருக்கு 683 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடைமடை வரை காவிரி நீர் பாயும்! மகசூல் பெருகி உழவர்கள் நெஞ்சம் நிறையும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!