சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை... மருத்துவக் குழுவினர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 29, 2020, 1:17 PM IST
Highlights

தமிழகம் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு முதல்வருக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழகம் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு முதல்வருக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

கொரோனா பரவலை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொது போக்குவரத்து தொடங்கி உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுத்து வந்த நிலையில்,  5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவக் குழுவினர் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்றும் கூறியுள்ளனர்.

click me!