திடீர் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் . லட்சக்கணக்கானோர் அன்றாட உணவு தேவைக்கு அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ,
இந்தியாவில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் அவர்கள் மீன்களை விறபனை செய்யவும் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது , ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் மீனவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் 7,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது , முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தது , ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
திடீர் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் . லட்சக்கணக்கானோர் அன்றாட உணவு தேவைக்கு அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் , இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர் , இந்நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகின்றன , இந்நிலையில் கடல் சார் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மிகுந்த வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தற்போது ஊரடங்களில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .
இது குறித்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் , மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் மீன்களை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது . அதுமட்டுமின்றி மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது , அதாவது இந்த தடை உத்தரவு காலத்தில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் பணிமனைகளில் போதிய சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் , இதை அந்தந்த மீனவ அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்பதுடன் , மாவட்ட நிர்வாகங்கள் அதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது .