சிபிஐ இயக்குநர் – சிறப்பு இயக்குநர் இடையே தொடரும் மோதல்… தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்…

Published : Oct 24, 2018, 09:34 AM ISTUpdated : Oct 24, 2018, 09:35 AM IST
சிபிஐ இயக்குநர் – சிறப்பு இயக்குநர் இடையே தொடரும்  மோதல்… தற்காலிக  இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்…

சுருக்கம்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா இடையே கடும் பனிப்போர் நீடித்து சர்ச்சை உருவாகியுள்ள  நிலையில், சிபிஐயின் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவை தற்காலிக இயக்குநராக நியமித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. இவல் சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றியவர்.   

மொயின் குரோஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளருக்கு எதிரான வழக்குகளை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு விசாரணை செய்து வந்தது .  அந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக ஹைராபாத்தை சேர்ந்த சதீஷ் சனா பாபுவை இணைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இருந்து சனா பாபுவை விடுவிக்க.3 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அலோக் வர்மா 2 கோடி  ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ததுள்ளது.

இந்நிலையில் ஊரெல்லாம் ரெண்டு நடத்தும் சிபிஐ அலுவலகத்திலேயே நேற்று மாலை சிபிஐ ரெய்டு நடத்தியது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் ஆதரவு  அதிகாரிகள்தான் இந்த ரெய்டை நடத்தினர்.  சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் அறைகளில் சோதனை நடந்தது.

இரு இயக்குநர்களுக்கிடையே  நடந்த பனிப்போர் மத்திய அரசுக்க பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து அதிரடி ஆக்சனில் இறங்கிய பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் சிபிஐ இணை இயக்குநராக இருந்த  நாகேஷ்வர் ராவை தற்காலிக இயக்குநராக நியமித்தார். மேலும்  அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். தற்போது இயக்குநராக பொறுப்போற்றுள்ள நாகேஸ்வர ராவ், உடனடியாக சிபிஐ அலுவலகத்துக்க கடுமையான பாதுகாப்பு போட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!