காரில் வைத்தே காம லீலை செய்த கெபிராஜ்.. காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் தீவிரம்..

By Ezhilarasan BabuFirst Published Jun 10, 2021, 5:38 PM IST
Highlights

அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட கெபிராஜுக்கு வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ், 19 வயது பயிற்சி மாணவி ஒருவரை நாமக்கல் மாவட்டத்திற்கு போட்டிக்காக அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட கெபிராஜுக்கு வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கெபிராஜ் மீது புகார் அளித்த மாணவி வேறு மாநிலம் என்பதாலும், குற்றம் நடந்தது நாமக்கல் மாவட்டம் என்பதாலும் விசாரணையில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி திரிப்பாதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் துவங்கப்பட்டு, விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார்.

வருகிற 14 ஆம் தேதி வரை மட்டுமே கெபிராஜுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் புகார் அளித்த பெண்ணை நேரில் அழைத்து விசாரணை செய்து அதை வீடியோ பதிவாக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும், கெபிராஜ் இதே போல் வேறு பயிற்சி மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!