திமுக குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு அட்டை... பி.கே.வுக்கு சிபாரிசு செய்யும் அமைச்சர் ஜெயகுமார்..!

By Thiraviaraj RMFirst Published Oct 1, 2020, 11:01 AM IST
Highlights

குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. 

எல்லோரும் நம்முடன் என்கிற திமுக உறுப்பினர் சேர்க்கை ஒரு ஏமாற்று வேலை என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கான உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கொரோனா காலத்தில் ’ஒன்றிணைவோம் வா’திட்டத்தை ஆரம்பித்த திமுக இப்போது ”எல்லாரும் நம்முடன்”என்ற பெயரில் எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக திமுகவில் இணைவதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போது கடிதம் மூலம் ஆள் திரட்டும் வேலையில் இறங்கியுள்ள மு.க.ஸ்டாலின் விடியும் வா என்கிற கோதாவிலும் இறங்கி இருக்கிறார். 
 
எல்லோரும் நம்முடன் திட்டத்தின் மூலம் எட்டு நாட்களில் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுக கட்சி சார்பில் தம்பட்டம் அடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மொபைல் எண் மற்றும் ஓடிபி மூலம் பதிவு செய்வது மட்டுமே போதும் என்பதால் ஆவணங்கள் சரிபார்ப்பு முறை இதில் இல்லை என்பதாலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பெயர்களில் எல்லாம் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு இருந்தது. (ஆகையால் தான், திமுக தம்பட்டம் அடிப்பதாக கூறியிருக்கிறோம்)
 
இந்நிலையில் இந்தத் திட்டத்தை அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். ’’குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 ஆயிரம் பேரை எப்படி சேர்க்க முடியும்? ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவொரு ஏமாற்று வேலை. அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கே சேரும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

click me!