டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஒரு நக்சலைட் எனவும் அவருக்கு நான்கு மாநில முதலமைச்சர் என் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று 7-வது நாளாக ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்திக்க ஆளுநர் மாளிகையிடம் 4 முதலமைச்சர்களும் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரது மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.