துணைவேந்தர் நியமனம்.. 1994இல் கருணாநிதி சொன்னதை மீறலாமா.? பாஜக கிடுக்கிப்பிடி..!

Published : Apr 27, 2022, 03:11 PM ISTUpdated : Apr 27, 2022, 03:12 PM IST
துணைவேந்தர் நியமனம்.. 1994இல் கருணாநிதி சொன்னதை மீறலாமா.? பாஜக கிடுக்கிப்பிடி..!

சுருக்கம்

 30, ஜூலை 1996ம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வி துறை அமைச்சரும், திமுகவின்  நீண்ட கால பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா சொன்னதை கேட்காமல் செயல்படுவது சரியா என்று கேட்கும் அமைச்சர் பொன்முடி, திமுக தலைவர் கருணாநிதி 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வந்துள்ளது நியாயமா? நீதியா? என்பதை விளக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

துணைவேந்தர் நியமனம்

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றிய நாளில், அமைச்சர் பொன்முடி அவர்கள், வேந்தராக முதல்வர் இருந்தால் என்ன தவறு? என்றும்  ஜெயலலிதா சொன்னதைக் கூட கேட்காமல், அதிமுகவினர் செயல்படுகின்றனர் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

"1994ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு,  ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினர். மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், திமுகழகத்தின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது" என்று திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் : நெஞ்சுக்கு நீதி, நான்காம் பாகம், பக்கம் 512)

தன்னாட்சி அதிகாரம்

மேலும், 30, ஜூலை 1996ம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வி துறை அமைச்சரும், திமுகவின்  நீண்ட கால பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 நியாயமா? நீதியா? 

ஜெயலலிதா சொன்னதை கேட்காமல் செயல்படுவது சரியா என்று கேட்கும் அமைச்சர் பொன்முடி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வந்துள்ளது நியாயமா? நீதியா? என்பதை விளக்க வேண்டும். மேலும், மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் வேந்தர்  இருக்க மாட்டாரே, அப்போது யார் வேந்தராக இருப்பார்கள்? மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்களே? என்று, இன்று கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் கேட்டிருப்பார் அல்லவா என்ற சிந்தனையில்லாமல் அமைச்சர் பொன்முடி அவர்கள் பேசியிருப்பது சரியா என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதுதான் கருணாநிதி பின்பற்றும் ஆட்சியா? 

அதேபோல், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக அரசின் முடிவிற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவது நியாயமா? நீதியா? இது தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை பின்பற்றும் ஆட்சியா என்று மக்கள் கேட்பார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். நிறைவேற்றப்பட்ட மசோதாவை, மறைந்த முதல்வர் மு கருணாநிதி அவர்களின் விருப்பத்திற்கேற்ப நம் முதல்வர் அவர்கள் திரும்ப பெறுவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி