எங்களுக்கு விழுந்த ஓட்ட காணோம்... வடிவேலு பாணியில் கதறும் டிடிவி.தினகரன்..!

Published : May 26, 2019, 11:29 AM ISTUpdated : May 26, 2019, 11:30 AM IST
எங்களுக்கு விழுந்த ஓட்ட காணோம்... வடிவேலு பாணியில் கதறும் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது, எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது, எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிகையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். தமிழகத்தில் சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.விற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும். அ.ம.மு.க. முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே, அவர்களின் வாக்குகள் எங்கே போனது..? என்று வினவினார். 

10 பேர் கட்சியை விட்டு செல்வதால், அமமுகவிற்கு எந்த பாதிப்புத் இல்லை. தொரடர்ந்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். செந்தில் பாலாஜி தி.மு.க., கட்சிக்கு சென்று வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக இருக்கலாம் என்றார். சென்ற தேர்தலில் 37 தொகுதியில் தோற்ற தி.மு.க., இப்போது 37-ல் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். எனவே பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!