கூட்டணியை விட்டு கொடுக்கலாம், கொள்கையை விட்டு கொடுக்க முடியாது: அதிரடி காட்டிய அமைச்சர் கே.டி ஆர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2020, 10:31 AM IST
Highlights

மும்மொழிக்  கொள்கையில் பாஜக, அதிமுக முரண்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு, இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தில் நிலைப்பாடு. 
கூட்டணி வேறு  கொள்கை . வேறு. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஸ்டாலின் நமது நாட்டின் தலைவர் கிடையாது, அவர் ரஷ்யாவின் தலைவர். முதல்வர் எதை செய்தாலும்  ஸ்டாலின்  எதிர்க்கிறார். வேளாண்  திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார்.எதை செய்தாலும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது.

மும்மொழிக்  கொள்கையில் பாஜக, அதிமுக முரண்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு, இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தில் நிலைப்பாடு. 
கூட்டணி வேறு  கொள்கை . வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம், கொள்ளையை விட்டு கொடுக்க முடியாது. கூட்டணி என்பது துண்டு போன்றது, கொள்கை என்பது வேஷ்டி போன்றது. சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு, எது நடந்தாலும், எப்படி நடந்தாலும், எந்த சூழ்நிலை நடந்தாலும்   முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவிற்கு  அதிமுக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். 

பட்டாசு, தீப்பெட்டி தொழிலை தமிழக முதல்வர் எடப்பாடி  அவர்கள் பாதுகாத்து வருகிறார். நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை, தேர்தலை தைரியமாக சந்திப்போம். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுவோம். வெற்றி பெறுவோம். அம்மா ஆட்சி மீண்டும் அமையும். முதல்வருக்கும் , துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு உண்டா என்ற கேள்விக்கு, அதிமுக கடல் போல் பெரிய ஆளுமையான கட்சி, கடலில் கொந்தளிப்பு வரும், ஆனால் கடல் அப்படியே தான் இருக்கும். சில நேரங்களில் கடல் பொங்கும் ஆனால் மங்காது. அது போல் அதிமுக பொங்கும் கடல். அதிமுக எந்த காலமும் அழியாது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் வரும்.
 

click me!