'ஜல் ஜீவன் மிஷன்' ஊழலுக்காக ஊழியர்களை மிரட்டு அதிமுக அரசு! நீங்கள் செய்வதுகிரிமினல் வேலை.எச்சரிக்கும் ஸ்டாலின்

By T BalamurukanFirst Published Sep 7, 2020, 8:42 AM IST
Highlights

பேக்கேஜ் டெண்டர்  முறையை முதல்வர் உடனே ரத்து செய்ய வேண்டும்.ஜல் ஜீவன் மிசன் திட்டம் மூலம் ஊழல் செய்வதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளதால் பேக்கேஜ் முறையை ரத்து செய்து நேரடியாக பஞ்சாத்துக்களின் கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

பேக்கேஜ் டெண்டர்  முறையை முதல்வர் உடனே ரத்து செய்ய வேண்டும்.ஜல் ஜீவன் மிசன் திட்டம் மூலம் ஊழல் செய்வதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளதால் பேக்கேஜ் முறையை ரத்து செய்து நேரடியாக பஞ்சாத்துக்களின் கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்..," 2374.74 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் தமிழக ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான பேக்கேஜ் டெண்டரை முறைகேடுகள் அரங்கேறியுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர்களை அ.தி.மு.க. அரசு மிரட்டுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த ஜே.ஜே.எம். திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் 497 ஊராட்சிகளில், 148 ஊராட்சிகளுக்கு விடப்பட்ட பேக்கேஜ் டெண்டரை எதிர்த்தும், ஊராட்சி மன்றங்களுக்கே நிதியையும், ஜே.ஜே.எம். பணிகளையும் நேரடியாக ஒதுக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 


அந்த வழக்கு விசாரணைக்காக, ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டம் குறித்த கிராமச் செயல்திட்டம் மற்றும் தீர்மானங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் உடனடியாக முன்தேதியிட்டுப் பெற வேண்டும். என்று மிரட்டல் விடுத்து, மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எல்லாம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரே அனுப்பியுள்ள ஆடியோ எச்சரிக்கை  அதிர்ச்சியளிக்கிறது.இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஊராட்சித்துறை அதிகாரிகள் - சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்  ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர்  உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, முதல்வர் பழனிசாமி ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களை எப்படி அவமதிக்கிறார்கள்.
 தங்களின் பதவிக்குரிய கடமை - கண்ணியம் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஊழலுக்காக எப்படியெல்லாம் அரசு நிர்வாக நெறிமுறைகளை வளைக்கிறார்கள்.முன்தேதியிட்டுத் தீர்மானங்களை மிரட்டிப் பெற முயற்சிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆடியோ எச்சரிக்கை ஆதாரமாக இருக்கிறது.ஆகவே இப்போதும் கூட காலம் கழிந்து விடவில்லை. ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டப் பணிகளுக்கான நிதிகளை நேரடியாக உள்ளாட்சி மன்றங்களுக்கே அளித்து - மாவட்ட அளவில் விடப்பட்டுள்ள பேக்கேஜ் டெண்டர் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். 

click me!