பரபரப்பான சூழ்நிலையில் டிசம்பர் 11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...!

Published : Dec 09, 2018, 04:19 PM IST
பரபரப்பான சூழ்நிலையில் டிசம்பர் 11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...!

சுருக்கம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மாலை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மாலை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. அதேபோல் பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!