அமைச்சர் தோல்வியை உள்ளத்திலும், இல்லத்திலும் கொண்டாடிய அதிமுகவினர்..!

By vinoth kumarFirst Published May 4, 2021, 5:45 PM IST
Highlights

நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம் சொந்த கட்சியினராலேயே விழுப்புரம் தொகுதியில் இந்த முறை தோற்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம் சொந்த கட்சியினராலேயே விழுப்புரம் தொகுதியில் இந்த முறை தோற்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் இருந்த சி.வி.எஸ், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்ட ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. கடலூர், விழுப்புரம் மாவட்ட கட்சி பொறுப்பையும், வகித்தார். கட்சியில் மட்டுமின்றி அரசு துறைகளிலும் தங்களது அதிகாரத்தை காண்பித்து அதிகாரிகளின் சாபத்தை சம்பாதித்தனர். 

நம்பி இருந்த கட்சிக்காரர்களையும் கரையேற்றாமலும், கைக்கொடுக்காமலும் பணம் சம்பாதிக்கும் சுயநலத்திலேயே இருந்தனர். இதனால் தேர்தலுக்காக காத்து கொண்டிருந்த கட்சியினரும், அதிகாரிகளும் வாக்குகள் மூலம் தக்க பாடம் காண்பித்தனர். நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் சொந்த கட்சியினராலேயே தோல்வியை தழுவினார்.

ஏறு முகம் இருந்தால் கவுண்டிங் சென்டருக்கு வரலாம் என காத்து இருந்த அவர், வீட்டிலேயே முடங்கி விட்டார். அடுத்த சுற்றில் முன்னேறுவோம் என கடைசி வரை நினைத்து காத்து இருந்த அவர

click me!