
சென்னை வானகரம் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 3000 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேடையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,செங்கோட்டையன்,பண்ருட்டி ராமசந்திரன், தங்கமணி,சரோஜா, எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன்,பொன்னையன்,எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்,தம்பிதுரை,திண்டுக்கல் சீனிவாசன்,பொள்ளாச்சி ஜெயராமன், பா.வளர்மதி,உள்ளிட்ட நிர்வாகிகள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு நடுநாயகமாக முதலவர் ஜெ வின் படம் வைக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா தலைமையில் வழிநடப்பது என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது