தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டே தமிழக சட்டசபை தேர்தலிலும் விஜயகாந்த் போட்டியிடவில்லை. கொரோனா பெருந்தொற்று என்பதால் அவர் குடும்பத்தினரால் மிகவும் கனவத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறார். பழையபடி கட்சி அலுவலகத்திற்கோ, அல்லது உறவினர்கள், தொண்டர்கள் இல்ல நிகழ்ச்சியகளில் கூட அவர் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது பிரசாரத்துக்காக சென்ற அவர் எதுவும் பேசாமல் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கு என்ன பிரச்சனை, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்க்ள் பரிசோதித்து வருகின்றனர்.