தஞ்சையை தட்டி தூக்க திமுகவில் அதிரடி மாற்றம்... தலைமை எடுத்த முடிவு..!

Published : Nov 18, 2020, 03:44 PM IST
தஞ்சையை தட்டி தூக்க திமுகவில் அதிரடி மாற்றம்... தலைமை எடுத்த முடிவு..!

சுருக்கம்

கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக திமுக தலைமை கூறியுள்ளது.

கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக திமுக தலைமை கூறியுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட ஆகிய மாவட்டங்கள் கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. தஞ்சை வடக்கு மாவட்டம்

*  திருவிடைமருதூர் (தனி)
*  கும்பகோணம்
*  பாபநாசம்

2.தஞ்சை மத்திய மாவட்டம்

*  திருவையாறு
*  ஒரத்தநாடு
*  தஞ்சாவூர்

3.தஞ்சை தெற்கு மாவட்டம்

*  பட்டுக்கோட்டை
*  பேராவூரணி

தஞ்சை வடக்கு மாவட்டம்

 பொறுப்பாளர்  - சு.கல்யாணசுந்தரம்,

தஞ்சை மத்திய மாவட்டம்

 பொறுப்பாளர் - துரை. சந்திரசேகரன்
 
தஞ்சை தெற்கு மாவட்டம்

 பொறுப்பாளர்  -  ஏனாதி ப.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!