தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் இவ்வழக்கின் விசாரணை ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை நாள்தோறும் விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து 2 நீதிபதிகள் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்தனர். 2 நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டதால் யாருடைய தீர்ப்பு சரி என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியாக எம். சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.