திட்டமிட்டு மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்: எஸ் .ஜெய்சங்கர்

Published : Nov 26, 2022, 11:02 AM IST
திட்டமிட்டு மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்: எஸ் .ஜெய்சங்கர்

சுருக்கம்

மும்பையில் 26/11 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவு நூறும் வகையில் இந்தியா இன்று 14வது ஆண்டு நினைவு நாளை கடைபிடித்து வருகிறது.

டெல்லியில் இன்று நடந்து வரும் நினைவு நாளில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 166 பேர் கொல்லப்பட்ட மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கொடிய தாக்குதலில் இருந்து தொகுக்கப்பட்ட சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.  

பின்னர் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசுகையில், "இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சர்வதேச சமூகத்தின் பொறுப்பு உறுப்பினர்களாக இருக்கும் நாங்கள் இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை நினைவில் கொண்டு, பயங்கரவாதத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவோம். அது எங்கள் கடமை" என்றார். 

இந்த வீடியோ 1 நிமிடம் 36 வினாடிகள் ஓடுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியுடன் முடிவடைகிறது. "ஒரு தாக்குதல் கூட பல தாக்குதல்களுக்கு சமம். ஒரு உயிரை இழப்பது பல உயிரிழப்புகளுக்கு சமம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓய மாட்டோம்'' என்று மோடி பேசி இருக்கிறார். 

பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக 2008, நவம்பரில், மும்பை நகருக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகள், 4 நாட்கள் நகரை சூறையாடி, 26 வெளிநாட்டினர் உட்பட 166 பேரை கொன்று குவித்ததை நாம் மறந்து விடக்கூடாது என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் ருசிரா காம்போஜ் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஷாகித் மொகமத், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர் ஆகியோரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா சமர்ப்பித்த முன்மொழிவுகளை பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!