கோர விபத்து... திருமண விழாவிற்கு சென்று ஊர் திரும்பிய 8 பேர் உயிரிழப்பு..!

Published : Jun 19, 2019, 04:18 PM IST
கோர விபத்து... திருமண விழாவிற்கு சென்று ஊர் திரும்பிய 8 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்டோர் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் வேன் மோதியது. இதில், வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 8 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேருக்கு அம்மாமாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!