இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
இந்தியாவில் சுமார் 17,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு நிலவரப்படி 529ஆக இருந்த கொரோனா இறப்பு எண்ணிக்கை தற்போது 560ஐ கடந்துவிட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்று முதன்முதலில் உறுதியான கேரளாவில், மளமளவென உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை, ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து கட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 402ஆக உள்ளது. அவர்களில் சுமார் 260 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பது நல்ல செய்தி. தமிழ்நாட்டில் இதுவரை 411 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். வெறும் 16 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 4000ஐ கடந்துவிட்டது. மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கடுத்தபடியாக டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகவுள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ கடந்துவிட்டது.
தெலுங்கானா, ஆந்திரா, உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் முறையே வெறும் 7 மற்றும் 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பூரண குணமடைந்ததால், கொரோனா இல்லாத மாநிலங்களாக கோவாவும் மணிப்பூரும் திகழ்கின்றன.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
மகாராஷ்டிரா - 4203
டெல்லி - 2003
தமிழ்நாடு - 1477
ராஜஸ்தான் - 1535
மத்திய பிரதேசம் - 1407
குஜராத் - 1851
உத்தர பிரதேசம் - 1084
தெலுங்கானா - 858
ஆந்திர பிரதேசம் - 646
கேரளா - 402
கர்நாடகா - 395
ஜம்மு காஷ்மீர் - 350
மேற்கு வங்கம் - 339
ஹரியானா - 233
பஞ்சாப் - 219
பீகார் - 96
ஒடிசா - 68
உத்தரகண்ட் - 44
ஹிமாச்சல பிரதேசம் - 39
சத்தீஸ்கர் - 36
அசாம் - 34
ஜார்கண்ட் - 42
சண்டிகர் - 26
லடாக் - 18
அந்தமான் நிகோபார் - 15
புதுச்சேரி - 7
கோவா - 7(அனைவரும் குணமடைந்தனர்)
மேகாலயா - 11
மணிப்பூர் - 2(அனைவரும் குணமடைந்தனர்)
திரிபுரா - 2
மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து - 1.