உக்ரைனுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படும்... உறுதி அளித்தது இந்தியா!!

Published : Mar 18, 2022, 05:38 PM IST
உக்ரைனுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படும்... உறுதி அளித்தது இந்தியா!!

சுருக்கம்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், காவல்நிலையங்கள் என பல முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் பல முக்கிய நகரங்கள் உருக்குலைந்துள்ளன. உக்ரைனின் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இதில், இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் போரால் பொதுமக்கள் உயிரிழக்கும் நிலைமை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. இந்த போரால் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். ஐ.நா.வின் முன்முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். 

உக்ரைன் முழுவதும் போரை உடனடியாக நிறுத்துவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். நமது பிரதமர் இதை பலமுறை வலியுறுத்தியதோடு, உடனடி போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் இருந்து சுமார் 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளோம். மேலும் 18 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்வதில் உக்ரைன் அதிகாரிகள் மற்றும் அதன் அண்டை நாடுகளின் உதவியதை நாங்கள் பாராட்டுகிறோம். உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான சூழ்நிலைக்கு ஏற்ப, வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்களை அனுப்பும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. மருந்துகள், நிவாரண உதவிகள் உட்பட 90 டன் அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?