6 முக்கிய சட்டங்களுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்

Asianet News Tamil  
Published : Aug 13, 2017, 10:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
6 முக்கிய சட்டங்களுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்

சுருக்கம்

ramnath govinth approved 6 important laws

ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்று 3 வாரங்களில் 6 முக்கியச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளார்.

இதில் கடல்சார் தொடர்பான வழக்கில் விசாரணை வரம்பை விரிபடுத்துதல், கைது மற்றும் கப்பல்களை சிறைப்பிடித்தல் உள்ளிட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த 6 சட்டங்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றன.

கடல்சார் தொடர்பான கோரிக்கைகள், விசாரணை வரையறைகளை விரிவுபடுத்துதல் சட்டம் 2017 என்ற சட்டம், மாநிலங்கள் அவையில் ஏப்ரல் 24ந்தேதியும், மக்களவையில் மார்ச் 10-ந்தேதியும் நிறைவேறியது.

குழந்தைகளுக்கு இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி திருத்தச்சட்டம் 2017. இந்த சட்டத்துக்கு மாநிலங்கள் அவை ஆகஸ்ட் 1-ந்தேதியும், மக்களவை ஜூலை இறுதியிலும் ஒப்புதல் அளித்தன.

புள்ளிவிவரங்கள் சேகரிப்பு திருத்த சட்டம், ஐ.ஐ.ஐ.டி. இந்திய தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன திருத்த மசோதா, காலனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!
இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!