
இந்தியாவின் இளைய பிரதமர் ராஜீவ் காந்தி, தனது 40வது வயதில் அமரர் ஆனார். 1991 மே 21ம் நாளன்று, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், தமிழீழ விடுதலைப் புலிகளால் (LLTE) கொல்லப்பட்டார். பதவியில் இருந்தபோது உயிரை இழந்த இரண்டாவது இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தியின் தாயாரான இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய தேசத்திற்கு ராஜீவ் ஆற்றிய சேவைகளுக்காக மிகவும் மதிப்புமிக்க மற்றும் உயரிய சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்இலங்கையில் ஆயுதமேந்திய தமிழ் பிரிவினைவாதக் குழுவான விடுதலைப் புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க..9 தோல்வி எடப்பாடி..சேலத்தில் மாநாடு.! கொங்கு மண்டலத்தில் சீக்ரெட் மீட்டிங் - ஓபிஎஸ் Vs இபிஎஸ் மோதல்