சரஸ்வதியை மதிக்காத டீச்சருக்கு வேலை கிடையாது! சஸ்பெண்ட் செய்த ராஜஸ்தான் அரசு!

Published : Feb 25, 2024, 07:39 AM ISTUpdated : Feb 25, 2024, 08:41 AM IST
சரஸ்வதியை மதிக்காத டீச்சருக்கு வேலை கிடையாது! சஸ்பெண்ட் செய்த ராஜஸ்தான் அரசு!

சுருக்கம்

குடியரசு தின விழாவின்போது மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்களுடன் சரஸ்வதி தேவியின் படத்தையும் வைக்க ஹேமலதா மறுத்துவிட்டார்.

சரஸ்வதி தேவியை அவமரியாதை செய்ததற்காகவும், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும் ராஜஸ்தானின் பாரான் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் உத்தரவிட்டதன் பேரில் ஆசிரியர் ஹேமலதா வெள்ளிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும் ஆசிரியர் ஹேமலதா பைர்வா பிகானரில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்குத் தினமும் வந்து தனது வருகையை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.

ஆசிரியர் ஹேமலதா மத உணர்வுகளை புண்படுத்தியது தொடர்பான ஆரம்ப விசாரணை முடிந்த பிறகு ஆசிரியரை சஸ்பெண் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று பரான் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

35 ரூபாய் காணும்... சத்தியம் செய்யச் சொல்லி மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்!

இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அரசுப் பள்ளியில் குடியரசு தின விழாவின்போது ஹேமலதாவுக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விழா மேடையில் மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்களுடன் சரஸ்வதி தேவியின் படத்தையும் வைக்க வேண்டும் என்று உள்ளூர் கிராம மக்கள் வலியுறுத்திய போதிலும் ஹேமலதா மறுத்துவிட்டார்.

சரஸ்வதி பள்ளி மற்றும் கல்விக்காக எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்று கூறி சரஸ்வதி படத்தை வைக்க முடியாது என்று கூறிவிட்டார். இது தொடர்பாக அதே அரசுப் பள்ளியைச் சேர்ந்த வேறு இரண்டு ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு பெண் ஆசிரியருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது.

உள்ளூர் மக்களுடன் உடன்பட்டு சரஸ்வதி தேவியின் படத்தை வைத்து சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம். குடியரசு தின விழாவையும் சுமூகமாக நடத்தியிருக்கலாம். மாறாக சரஸ்வதி படத்தை வைக்க முடியாது என்று வாக்குவாதம் செய்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

'அழகான முகத்தை மறைக்குதே...' பர்தா அணிந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த சென்னை போலீஸ்!

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்