வியக்கத்தகு வசதிகளுடன் கூடிய எம்பிக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பை நவ.23 திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி

By karthikeyan VFirst Published Nov 22, 2020, 10:19 PM IST
Highlights

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்பை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 23ம் தேதி(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிவைக்கிறார். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்பை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 23ம் தேதி(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்துகொள்கிறார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு நியூடெல்லியில் டாக்டர் பிடி.மார்க் பகுதியில் அமைந்துள்ளது. 80 ஆண்டுகள் பழமையான 8 பழைய பங்களாக்கள், 76 ஃப்ளாட்டுகளாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மத்தியிலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணி தாமதமாகாமல் கட்டப்பட்டதால் திட்டமிட்ட தொகையில் 14 சதவிகிதம் குறைவான தொகைக்கே கட்டி முடிக்கப்பட்டது.

Fly Ash மற்றும் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகள், வெப்ப காப்பு மற்றும் ஆற்றல் செயல்திறனுக்கான இரட்டை மெருகூட்டப்பட்ட ஜன்னல்கள், ஆற்றல் வாய்ந்த எல்.இ.டி லைட்டுகள், ஒளி கட்டுப்பாட்டுக்கான ஆக்கிரமிப்பு அடிப்படையிலான சென்சார்கள், வி.ஆர்.வி உடனான ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல பசுமை கட்டிட முயற்சிகள் இந்த கட்டுமானத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குறைந்த மின் நுகர்வுக்கான அமைப்பு, நீர் பாதுகாப்பிற்கான குறைந்த ஓட்டம் சாதனங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கூரை சூரிய ஆலை ஆகியவையும் உள்ளன.
 

click me!