பி.பி.திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யணும்; நவீன் பாபு குடும்பத்திற்கு நீதி கிடைக்கணும் - ராஜீவ் சந்திரசேகர்!

Ansgar R |  
Published : Oct 29, 2024, 05:53 PM IST
பி.பி.திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யணும்; நவீன் பாபு குடும்பத்திற்கு நீதி கிடைக்கணும் - ராஜீவ் சந்திரசேகர்!

சுருக்கம்

கடுமையாக உழைத்த நவீன் பாபுவை அவமானப்படுத்தி, துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியது திவ்யா தான் என்று கூறியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம்: ஏடிஎம் நவீன் பாபுவின் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணூர் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.பி. திவ்யா சரணடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். அவதூறு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட கேரள மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான பி.பி. திவ்யா மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் கேரள கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள எண்ணம் மாற வேண்டும். சட்டத்தின் முழுமையான மற்றும் தெளிவான பயன்பாட்டின் மூலம் அதை மாற்ற முடியும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். கடுமையாக உழைத்த நவீன் பாபுவை அவமானப்படுத்தி, துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டி, அவரது குடும்பத்தை என்றென்றும் சிதைத்தது திவ்யா தான் என்று அவர் கூறியுள்ளார். அந்தக் கஷ்டங்களுக்கும், வேதனைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்தார்.

Ayushman Bharat Digital Mission: உ.பி.யை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் யோகி! டிஜிட்டல் மருத்துவப் புரட்சி!

இதற்கிடையில், போலீசாரிடம் சரணடைந்த பி.பி. திவ்யாவை காவலில் எடுத்து விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. கண்ணூர் காவல் ஆணையர் உள்ளிட்டோர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து திவ்யாவிடம் விசாரணை நடத்துகின்றனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, திவ்யாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. நவீன் பாபுவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியிடம் தான் திவ்யா மதியம் சரணடைந்தார். முன்கூட்டிய ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, திவ்யா சரணடைந்தார். காவல்துறையினருக்கும் திவ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு மையத்தில் வந்து சரணடைந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.

அவர் சரணடைந்த காட்சிகள் வெளியே கசியாமல் இருக்க, காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தியது என்றும் கூறப்படுகிறது. கண்ணூர் மாவட்டம் கண்ணபுரத்தில்உள்ள  திவ்யாவின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பொதுவான இடத்தில் வந்து தான் அவர் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Cow Dung Lamps: அயோத்தியில் கால்நடை வளர்ப்புத் துறை சார்பில் 1.25 லட்சம் கோமிய விளக்குகள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்