பெங்களூருவில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி; களத்தில் சோனியா காந்தி பரபரப்பான கர்நாடகா தேர்தல்!!

Published : May 06, 2023, 12:14 PM ISTUpdated : May 06, 2023, 02:44 PM IST
பெங்களூருவில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி; களத்தில் சோனியா காந்தி பரபரப்பான கர்நாடகா தேர்தல்!!

சுருக்கம்

பெங்களூருவில் பிரதமர் மோடி இன்று 26 கி. மீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்றத்துக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் களம் காணுகின்றன. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் இன்று முக்கியத் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் சுமார் 26 மணி நேர ரோடு ஷோ நடத்துகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஹூப்ளியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஸ் ஷெட்டரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இந்த தேர்தலில் சோனியா காந்தி மேற்கொள்ளும் முதல் பிரச்சாரம் இதுவாகும். இவருடன் மாலை ஆறு மணி கூட்டத்தில் ராகுல் காந்தியும் இணைந்து கொள்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு பொதுக்கூட்டங்கள் மற்றும் இரண்டு ரோடு ஷோக்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா மூன்று ரோடு ஷோக்களை நடத்துகிறார். முன்னதாக பெல்காவியில் நடைபெறும் பேரணிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பிரதமர் மோடி பெங்கரூருவில் ரோடு ஷோவை துவக்கி நடத்தி வருகிறார். காலை 10 மணிக்கு ஜே.பி.நகர் 7வது கட்டத்திலிருந்து தொடங்கி 18 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மல்லேஸ்வரத்தில் உள்ள சாங்கே சாலையில் இந்த ரோடு ஷோ நிறைவடைகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்சிவாலா பாஜக தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை "கொலை செய்ய" சதித்திட்டம் தீட்டுவதாக சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். 

செய்தியாளர்களிடம் சிதாபூரில் இருந்து பாஜக வேட்பாளரின் ஆடியோ கிளிப்பை வெளியிட்டு பேசுகையில், "மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது முழு குடும்பஉறுப்பினர்களையும் கொல்லுவோம் என்று பாஜகவினர் பேசி இருப்பது மிகவும் மலிவான அரசியல்'' என்று தெரிவித்துள்ளார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!
இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!