மும்பை தாக்குதல் : இன்று எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

Asianet News Tamil  
Published : Nov 26, 2016, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
மும்பை தாக்குதல் : இன்று எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

சுருக்கம்

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். 2008 நவம்பர் 26-ம் தேதி நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 

இந்திய பாதுகாப்புப் படையின் சிறப்பு கமாண்டர்கள் பலமணி நேரம் போராடி, இந்த தாக்குதலை முறியடித்து, ஏராளமானோரை பாதுகாப்பாக மீட்டனர். நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இனி 45 நாள் காத்திருக்க வேண்டாம்! புக் செய்ததும் இன்ஸ்டண்டாக டெலிவரியாகும் சமையல் கேஸ்.. HPCL அதிரடி
Shirdi Temple: சாய்பாபா தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களே கவனிக்கவும்.. ஜூலையிலிருந்து புதிய கட்டணம் அமல்!